எனக்கு பணம் வேணும்... கதை எப்படி வேணா இருந்து தொலைக்கட்டும் - டாப்ஸி
எனக்கு பணம்தான் பிரதானம். பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன். கதை எப்படி இருந்தாலும் கவலையில்லை... - இது நடிகை டாப்ஸி பண்ணுவின் ஓபன் ஸ்டேட்மென்ட்!

அவரது கால்ஷீட்டை விரும்பி கேட்டு வருகிறார்களாம். இப்போது தெலுங்கில் இரண்டு, தமிழில் இரண்டு, இந்தியில் ஒன்று என 5 படங்களை கைவசம் வைத்திருக்கும் டாப்ஸி, அதிரடியாக சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
ஏன் இப்படி ஏத்திட்டீங்க? என கேட்பவர்களுக்கு டாப்ஸி சொல்லும் பதில் பக்கா 'தொழில்முறை'!
இதோ அம்மணியின் பதில்...
"பணம் எல்லோருக்கும் முக்கியம். பணம் இல்லாமல் எதுவும் இல்லை. நான் பணத்துக்காகத்தான் நடிக்கிறேன். சில நடிகைகள் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக இருந்தால் சம்பளம் இல்லாமல் நடிப்பேன் என்று சொல்வாங்க. அதெல்லாம் பொய். சம்பளம் இல்லாமல் யாரும் நடிக்கமாட்டார்கள்.
நடிகைகள் எல்லோருமே சம்பாதிக்கத்தான் நடிக்க வந்து இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியம் அல்ல. அதை காப்பாற்றவும் தெரிந்து இருக்க வேண்டும். நான் நடிக்கும் படங்களில் எனக்கு வரவேண்டிய சம்பள பணத்தை கறாராக பேசி வாங்கிடுவேன்," என்றார்.
டாப்ஸி பண்ணு... சமத்துப் பொண்ணு!

Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "எனக்கு பணம் வேணும்... கதை எப்படி வேணா இருந்து தொலைக்கட்டும் - டாப்ஸி"
Post a Comment